Mr Rasalingam Thurairatnam

(யாழ். அரிசி ஆலை முன்னாள் உரிமையாளர்)

Rasalingam Thurairatnam

Deceased: 13 January 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்தவருமாகிய திரு. இராசலிங்கம் துரைரட்ணம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் - மனோன்மணி தம்பதியினிரன் பாசமிகு மகனும்,

அருள்பிரகாசம் - ஞானம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற கிறிஸசதபெல்லின் அவர்களின் அன்புக் கணவரும்,

கஜனி (நோர்வே), சுகந்தினி (கொழும்பு), நிஷான் (அமெரிக்கா) ஆகியோரின் அன்னபான தந்தையும், 

மேர்வின் (நோர்வே), ராஜன் (கொழும்பு), ஸ்டெல்லா (அமெரிக்கா) ஆகியோரின் மாமனாரும், 

அபிஷா, அலன், டானியல், டேவிட் ஆகியோரின் தாத்தாவும்,

சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ஞானம்பிகை, காலஞ்சென்ற பேரானந்தம், காலஞ்சென்ற குணராசா, புஷ்பம், பரஞ்சோதி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை மலர்ச்சாலையில் 15-01-2024 திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் 16-01-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வைக்கப்பட்டு பின்னர் அடக்க ஆராதனை செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2024 05:00)