Mrs. Rasamani Vinayagamurthy
Deceased: 22 January 2025
யாழ். நீர்வேலி மேற்கு, நீர்வேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமணி விநாயகமூர்த்தி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - அருளம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,
விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா (பிரான்ஸ்), தீபகலா (ஹொலண்ட்), குசந்தி (யமுனா - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவதாஸ் (பிரான்ஸ்), பத்மரஞ்சன் (ஹொலண்ட்), சிவசங்கர் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியும்,
அருண், அகில், அருந்தினா, திவ்வியா, தீனு, சயேஷ், லூப்னா ஆகியோரின் பேர்த்தியும்,
லியானாவின் பூட்டியும்,
காலஞ்சென்ற கந்தசாமி, புஸ்பராணி ஆகியோரின் சகோதரியும்,
பராசக்தியின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
மாசுவன் நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
