திருமதி. இராசநாயகம் ஜோசெப்பின் இராசாத்தியம்மா
தோற்றம்: 28 டிசம்பர் 1938 - மறைவு: 13 ஜூலை 2025
"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.
என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்,
விசுவாசத்தை காத்துகொண்டேன்."
(2 தீமோத்தியோ 4:7)
யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் ஜோசெப்பின் இராசாத்தியம்மா அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ் - பரிமளம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜினி, Rev.Sr. யூலியற் மேரி (ரஞ்சனி) LSP, அன்ரன், யக்குலின், டிக்சன், இராஜகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சாள்ஸ் மத்தியூஸ், பிரபா, சேகர், தர்மினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜோசெப் திருச்செல்வம், இராசநாயகம், மதுரநாயகம், ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எட்மென் ராஜ், Rev. Fr. டெஸ்மன் ராஜ் CMF, நிக்ஸ்மென் ராஜ் (அச்சுவேலி), ஆன்லக்சினி, ஆன்யன்சினி, நிரோசன், நன்சி, ஜொனி, அக்சியா, அன்ற்ரன், அஸ்வினி ஆகியோரின் பாசமிக்க பேத்தியும்,
லேயோவின், அலட் ஜலோசியா, லியோறியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் சூராவத்தை புனித திரேசம்மாள் ஆலயத்தில் நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
