திருமதி. இராசரத்தினம் ருக்மணி
தோற்றம்: 27 மார்ச் 1928 - மறைவு: 21 அக்டோபர் 2023
வருஷப்புலம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் ருக்மணி அவர்கள், சனிக்கிழமை (21/10/2023) அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. அப்புக்குட்டி தம்பதியினரின் அன்பு மகளும்,
திரு. திருமதி. வேலாயுதம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
அமரர் வேலாயுதம் இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகானந்தன் (ஆஸ்திரேலியா), குகநேயன் (கனடா), குககுமாரன் (கனடா), ஜெயகௌரி, ஜெயசக்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும், தர்மினி,
தெரெஸ், குமுதினி, ஸ்ரீஷங்கர், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
குருகுகன், சாம்பவி, ஹரன், தர்ஷன், ரூபினி, மீரா, தனுஜன், கஜானன், மாதங்கன், வேள்மாறன், அக்சரா, அஜந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹார்மன், அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை (22/10/2023) மதியம் 2.00 மணி முதல் பார்வைக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, திங்கட்கிழமை (23/10/2023) அன்று காலை 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, மதியம் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2023 23:20)
