திருமதி. இராசரத்தினம் நாகேஸ்வரி [செல்லக்கிளி]
தோற்றம்: 31 டிசம்பர் 1945 - மறைவு: 05 ஆகஸ்ட் 2024
யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த திருமதி. இராசரத்தினம் நாகேஸ்வரி அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிள்ளைனார் இராசரத்தினம் (ஓய்வுநிலை மேலதிக காணி பதிவாளர் யாழ் மாவட்டம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசரத்தினம் ரவீந்திரன் (கனடா), இராசரத்தினம் முரளீதரன் (கனடா), சிவகுமார் வசந்தி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ர.செல்வஜோதி, மு.தர்ஷினி, ச.சிவகுமார் (மனோ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ர.தாரணி, மு.ஆரணி, சி.சிவானுஜன், சி.சிவகஜன், மு.சாய்சரண் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
