திருமதி. இராசரத்தினம் சின்னத்தங்கம்
தோற்றம்: 03 ஏப்ரல் 1944 - மறைவு: 21 செப்டம்பர் 2022
யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை ஓவசியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சின்னத்தங்கம் அவர்கள் 21-09-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, ஜெயபவான் (சுவிஸ்), தயாளினி (சுவிஸ்), ரஞ்சினி (சுவிஸ்), சுகந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தராசா (பிரதேசசபை வலி வடக்கு), சசிச்செல்வி (சுவிஸ்), ஞானவேல் (சுவிஸ்), கேதீஸ்வரன் (சுவிஸ்), பரமேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுமிதன் (இலங்கை), ஜெனிஷா, ஜானுசன், ஜெருஷா, கீர்த்தனா, கீர்த்திகா, தனுசன், மதுசன், ஷாலினி, றவீனா (சுவிஸ்), சைனிகா, தரணிகா(ஜேர்மனி), கணேசகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஷ்விதா அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரமேஸ்வரி மற்றும் முருகையா, மல்லிகாதேவி, துரை (லண்டன்), புவனேஸ்வரி, அண்ணாத்துரை (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, அன்னராசா, கிருஸ்ணமூர்த்தி, நவரத்தினம் மற்றும் தவமணி, ஜெயகௌரி (லண்டன்), வதனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, விசாலாட்சிப்பிள்ளை, இராசேந்திரம், அன்னலட்சுமி, குருசாமி, விமலாதேவி மற்றும் சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான செந்தூரன், தனலக்ஷ்மி மற்றும் மயூரன், முரளிதரன்(பிரான்ஸ்), சிறிதரன், கேசவன், தனுஷா(ஐக்கிய அமெரிக்கா), மதுரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பகிதரன் (சுவிஸ்), தயாபரன், மோகனா, தாரணா (பிரான்ஸ்), பிரசாந்தி, மதுசாந்தி, புகழோயினி (லண்டன்), திவ்யா, துசியா, தனுஜா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி கொட்டுப்பள்ளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
