திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் (மணி)

இராசரத்தினம் சுகிர்தாம்பாள் (மணி)

தோற்றம்: 05 ஜனவரி 1936 - மறைவு: 19 மே 2025

யாழ். சிறுப்பிட்டியை (சத்திரை) பூர்வீகமாகவும், மாத்தறையை பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் சுகிர்தாம்பாள் அவர்கள்  19-05-2025 திங்கட்கிழமை அன்று புத்தூரில் சிவபாதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - தண்டிகைப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி - குஞ்சுப்பிளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற முத்துச்சாமி இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளன் (இலண்டன்), சத்தியசீலன் (சீலன் மாஸ்டர் - அவுஸ்திரேலியா), நந்தினி, சாந்தினி, சுகந்தினி, ஜெயசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்களேஸ்வரி, உமாதேவி, காலஞ்சென்ற இராசேந்திரம், ரவிச்சந்திரன், கிருபாகினி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, செல்வநாயகம், நாகராஜா இராசாம்பிகை, மற்றும் இராசரத்தினம், ஜெயராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஷன் - லாவன்னியா, ஜனனி - கௌத்தமன், சுஜி - ரவிசங்கர், சுஜன், அரவிந்தன், சிந்துஜன், கயல், காவியா ஆகியோரின் அருமை பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது சிவன்கோவில் வீதி, புத்தூர் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் புத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!     

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2025 20:41)