திரு. இராசையா சோமாஸ்காந்தன்
(மக்கள் வங்கி முகாமையாளர், பொது சேவகர்- ஜேர்மனி)
தோற்றம்: 03 மே 1946 - மறைவு: 30 டிசம்பர் 2021
யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதி 2ம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Osnabrück, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சோமாஸ்காந்தன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவானர் இராசையா(சாண்டோ ராஜா, அதிபர்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வசோபனா (பிரித்தானியா), மதனரூபன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சதா (பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,
சேயோன் (பிரித்தானியா), கிஷோன் (பிரித்தானியா), சாம்ராஜ் (பிரித்தானியா) ஆகியோரின் அப்பப்பாவும்,
காலஞ்சென்ற பால சரஸ்வதி தேவி, நிர்மலா தேவி (ஜேர்மனி), சுலோசனா தேவி (யாழ்ப்பாணம்), மாலதிதேவி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானசம்பந்தன் (CID பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற ராஜேந்திரம் (ஜேர்மனி), தேவராஜா (யாழ்ப்பாணம்), விவேகானந்தன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
ஞானகனேஸ்வரி (கொழும்பு), கோமதி (யாழ்ப்பாணம்), சுகந்தன் (யாழ்ப்பாணம்), சுதர்சன் (யாழ்ப்பாணம்), துஷ்யந்தி (யாழ்ப்பாணம்), ஆனந்தி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாய் மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
www.tamilthakaval.org
