திருமதி. இரத்தினம் அன்னபாக்கியம்
தோற்றம்: 04 ஏப்ரல் 1939 - மறைவு: 29 ஆகஸ்ட் 2024
யாழ்.கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், துர்க்காபுரம் தெல்லிப்பழையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் அன்னபாக்கியம் அவர்கள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வன்னித்தம்பி-சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
இரத்தினம் (உத்தரவு பெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணேசானந்தன், தனபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற துரைரத்தினம், சுப்பிரமணியம், சின்னத்துரை, கந்தசாமி, அப்பாப்பிள்ளை தங்கம், சண்முகநாதன் சின்னத்தங்கம், இராசம்மா ஆகியோரின் மைத்துனியும்,
துரைரத்தினம் ஜெயக்குமார் (அமெரிக்கா), ஜெயந்தி ஜீவேஸ்வரன், ஜெயரூபி முரளிதரன் (இலண்டன்), சின்னத்துரை கிருபாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
காலஞ்சென்ற இராசமலர், கணேசலிங்கம், சிவலிங்கம (அவுஸ்திரேலியா), தவலிங்கம் (இலண்டன்), தேம்பாமலர் (இலண்டன்), புனிதமலர் (இலண்டன்), சற்குணநாதன், இளமுருகன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 02-09-2024 திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
முகவரி:-
21/1-1/1, வொண்டர்வர்ட பிளேஸ், தெஹிவளை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
