திருமதி. இரத்தினவதனா அருட்செல்வம்

(ஓய்வு பெற்ற ஆசிரியை-சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்)

இரத்தினவதனா அருட்செல்வம்

தோற்றம்: 16 ஜூலை 1955 - மறைவு: 02 ஜனவரி 2022

யாழ் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினவதனா அருட்செல்வம் (ஓய்வு பெற்ற ஆசிரியை-சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம்) அவர்கள் 02-01-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று  கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் திரு திருமதி வெற்றிவேலு பாக்கியரத்தினம் தம்பதியரின் மூத்த மகளும்,
 
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் கனகம்மா தம்பதியரின் மூத்த மருமகளும்,
 
திரு. அருட்செல்வம் (ஓய்வு பெற்ற அலுவலக உத்தியோகத்தர் - சென் ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரத்தினமாலா, காலஞ்சென்ற இரத்திராசா (பொறியியலாளர்), இரத்தினவேல் (யாழ் /சந்திரபுர ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயம்,மட்டுவில்), இரத்தினசிங்கம் (காணாமல் போனவர்), இவ்லின் இரத்தினலீலா (முன்னாள் யாழப்பாணக் கல்லூரி ஆசிரியை, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கருணாமூர்த்தி, பிரபதாரணி, சுபாங்கனி, ராஜ்குமார், காலஞ்சென்ற செல்வேந்திரம் மற்றும் தவராசா (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
 
மேரி காஞ்சனா, ஜெயரூபினி(பிரான்ஸ்), ஜெயனி (லண்டன்), காலஞ்சென்ற  சஜதன் மற்றும் சர்மிலன் (கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 
சுஜந்தன், மாதுரி தெபோரா (கனடா), டானியல், ரூத், டினோஜன், இவாஞ்சலின்  ஆகியோரின் மூத்த மாமியும்,
 
ஜெசிக்கா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புப் பெரியம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று 03-01-2022ம் திகதி திங்கட்கிழமை  பிற்பகல் 2.00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று நேரியதூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விலாசம்:-
 
இரத்தின வாசம்,
இலுப்பையடி வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி.

தகவல் :- குடும்பத்தினர்
 
+94 21 227 94
+94 77 612 5983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2022 13:29)