திரு இரத்தினவடிவேல் நேசன்
தோற்றம்: 13 மே 1955 - மறைவு: 25 ஜனவரி 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Corridonia இத்தாலி, Hannover ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரத்தினவடிவேல் நேசன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் - மகாலக்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கோபாலசாமி - தேவகுஞ்சரம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சசிகலா (பவுண்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்திரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குகன், மோகன் மற்றும் யோகன், மீரா, மகேஷ், வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராதாரமணி, ஜெயபாலன், தேவிகாரமணி, சற்குணபாலன், நந்தபாலன், காலஞ்சென்ற முகுந்தபாலன், வனிதாரமணி, ரஞ்சிதாரமணி, லலிதாரமணி, சிறிதரன், சாந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
