திருமதி. ரவிச்சந்திரன் நிர்மலா (மல்லிகா)

(GTZ - நிறுவனத்தின் பணியாளரும், பொது சேவையாளரும்)

ரவிச்சந்திரன் நிர்மலா (மல்லிகா)

தோற்றம்: 11 நவம்பர் 1965 - மறைவு: 11 ஜூலை 2024

யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரவிச்சந்திரன் நிர்மலா அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெரியதம்பி-காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி-அன்னமுத்து தம்பதியினரின் மருமகளும்,

ஜெனாவின் பாசமிகு தாயும்,

இந்திரா, அருந்தவநாதன், புலேந்திரன், மித்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

புஸ்பராணி, குணம், ஜெயமதி, குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பவுலா, நிக்கோன், விதுஷா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும்,

ஜெனேஷ், தாட்சா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்மித், ஸ்டீவ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10. 00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பரமேஸ்வரி சனசமூக நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2024 04:00)