திருமதி. ரீட்டா டேவிட் குமார்
தோற்றம்: 05 மார்ச் 1944 - மறைவு: 26 மே 2026
கண்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரீட்டா டேவிட் குமார் அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ஜோப் தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்ற டேவிட் குமார் (Gallops Trading Private Limited நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் தலைவர்) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற ரெஜினா, கிறிஸ்டோபர், பிலிக்ஸ், பெனடிக், கிரிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் (இல- 27, கொன்வெண்ட் ஒழுங்கை, நாயக்கந்தை, வத்தளை) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-05-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
