திரு. ரெங்கசாமி பன்னீர்செல்வம்
தோற்றம்: 28 மார்ச் 1959 - மறைவு: 04 மார்ச் 2025
பதுளை - வெலிமடையைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரெங்கசாமி பன்னீர்செல்வம் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ரெங்கசாமி - பெரமாயி தம்பதியினரின் அன்பு மகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனுதனன், ஹரியாழினி, நவீந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவா (வவுனியா), சரவணன் (வவுனியா), சந்திரகுமார் (மட்டக்குளி), பத்மினி (வவுனியா), லக்ஷ்மி (திருகோணமலை), காலஞ்சென்றவர்களான பெருமாள், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06-03-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
