திருமதி. ரோகிணி (ராணி) சிவகுருநாதன்
மறைவு: 14 டிசம்பர் 2025
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Northwood - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகிணி சிவகுருநாதன் அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவப்பிரகாசம் தம்பதியினரின் அன்பு மகளும்,
கந்தர்மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சபாரட்ணம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா, மேனகா ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
இமோஜன், சிவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இலண்டனைச் சேர்ந்தவர்களான திருமதி. ராதா சிவஞானம் (காலஞ்சென்ற) சிவக்குமாரன் (நவமணி), திருமதி. ரஜினி (ரூபி) விஸ்வநாதன் (கொழும்பு-13), இலண்டனைச் சேர்ந்தவர்களான திருமதி. ரமணி (பபி) சலாமா, திருமதி ரேணுகா உமாசுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அவுஸ்திரேயைவைச் சேர்ந்த திருமதி. சசிகலா சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று Ruislip இலண்டனில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
