Mrs. Rukmanidevi Nallanathan

(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் - இலங்கை காப்புறுதிக் கூட்டுதாபனம்)

Rukmanidevi Nallanathan

Date of Birth: 24 May 1936 - Deceased: 27 April 2025

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணிதேவி நல்லநாதன் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பாக்கியம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற நல்லநாதன் அவர்களின் துணைவியாரும்,

காலஞ்சென்றவர்களான கோணேசலிங்கம், மகாலிங்கம் மற்றும் சத்தியபாமா, மகேந்திராதேவி ஆகியோரின் சகோதரியும்,

பாக்கியலோஜினி, சசிகலா, நந்தகுமார், நளாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீதரன், மோகனராசா, தயாளகுணநாதன் ஆகியோரின் மாமியாரும்,

ஸ்டீஷன், சிமந்தா, திவ்யா, தனிக்கா, ஜெனட், மார்வின், ஜோசுவா, சுருதினி, லக்ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றுக்காயா, வீடோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-05-2025 வியாழக்கிழமை காலை 7:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2025 04:00)