Mr. S.D.Yogendra
(மூத்த சட்டத்தரணி-கொழும்பு)
Deceased: 12 September 2024
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S.D.யோகேந்திரா அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று தனியார் மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி (துரைசாமி ஸ்டோர்ஸ்)-சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும்,
இருபாலையைச் சேர்ந்த கலாநிதி வ.கணேசலிங்கம்-புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
குகப்பிரியா அவர்களின் அன்புக்கணவரும்,
துளசி, அகிலா ஆகியோரின் பாசமுள்ள தகப்பனும்,
ஹமரின் மாமனாரும்,
அலானாமாயா ராதாவின் தாத்தாவும்,
யோகேஸ்வரி விஜயரத்தினம், காலஞ்சென்றவர்களான பாலராம், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சகோதரரும்,
காத்தியாயினி, காலஞ்சென்ற உமா மகேஸ்வரன், சந்திரமோகன், மதன்மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 13-09-2024 வௌ்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முகவரி:-
21/1, அல்பிரட் ஹவுஸ் கார்டன்,
கொழும்பு-03.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
