திரு. S. இராஜநாதன்
தோற்றம்: 22 அக்டோபர் 1948 - மறைவு: 05 பெப்ரவரி 2025
இல-50A, வஜிரா வீதி, கொழும்பு - 05 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. S. இராஜநாதன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி - நவரத்தினம் தம்பதியினரின் செல்வப் புதல்வரும்,
காலஞ்சென்ற பரமன் - ராஜமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அருணா பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
கஜன், கிருஷாண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லிமந்தியின் அன்பு மாமனாரும்,
அன்னாரின் புகழுடல் 07-02-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-02-2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
