திரு. சி.வைத்திலிங்கம்பிள்ளை

சி.வைத்திலிங்கம்பிள்ளை

தோற்றம்: 21 ஜூலை 1941 - மறைவு: 14 ஜூலை 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், தில்லைநகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சி. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அ.ச.சிதம்பரம்பிள்ளை - பெருமாய் அம்மாள் தம்பதியினரின் மகனும், திண்ணனூர் கிராமம் காலஞ்சென்ற செல்லமுத்துபிள்ளை - சின்னபிள்ளை அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்குமார், சங்கீதா, கவிதா ஆகியோரின் தகப்பனாரும்,

சுதர்ஷனி, ரவி, அருளாளன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பழனிசாமி, ராமச்சந்திரன் மற்றும் தியாகராஜன் (சிதம்பர மஹால் - திருச்சி), பாரிபுஸ்பன், சரோஜினி, விஜயலக்சுமி, ஜானகி, ராஜேஷ்வரி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற மூக்கையா, கணபதிராஜா, ஜோதிராஜா, அமிர்தஜோதி, சண்முகராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன், நாகலிங்கம்பிள்ளை மற்றும் ராமசுப்பிரமணியம், காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி, விஜயகுமாரி, சங்கரி, ரஞ்சனா ஆகியோரின் கொழுந்தனாரும்,

ஸ்ரீவத்ஸா கார்த்திக், ஷிவானி, யுவராஜ் ஆகியோரின் தாத்தாவும்,

வேதாந்த், நிகிலன் ஆகியோரின் பாட்டனாரும்,

காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை, செல்லம், ராமரத்தினம் பிள்ளை, மரகதவள்ளி, வைத்தீஸ்வரன், மஞ்சுளா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இல- D66, 7 ஆவது கிராஸ் தில்லைநகர், திருச்சி இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/07/2026 00:00)