திரு. S. யோகராஜ்

(ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் - லிட்டில்வௌி தமிழ் வித்தியாலயம், கலஹா)

S. யோகராஜ்

தோற்றம்: 22 மார்ச் 1963 - மறைவு: 01 ஜூலை 2024

கண்டி கலஹாவைச் சேர்ந்த திரு. S.யோகராஜ் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம்-வள்ளியமமை தம்பதியினரின் அன்பு புதல்வரும், திருகோணமலை காலஞ்சென்ற சுப்பிரமணியம்-சிவமணி தம்பதியினரின் மருமகனும்,

கீதாஞ்சலி (ஆசிரியை - அத்திமோட்டை தமிழ் வித்தியாலயம், திருகோணமலை),

துவிஜா, லிசிகேஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,

தனலட்சுமி, சிவபாக்கியம், மஞ்சுளாதேவி, காலஞ்சென்ற நிர்மலா தேவி, செல்வராஜ் (பராசக்தி ஸ்டோர்ஸ்-கலஹா) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பதுளை ராஜகோபால், அமரசிங்கம், விஜயராஜன் மற்றும் மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,

சரிதா, பிரியா, ஶ்ரீபிரியா, உமாசாந்தினி, காயத்திரி, திலகலதா (ஆசிரியர்-விவேகானந்த தமிழ் வித்தியாலயம், கண்டி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கலஹா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-07-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, கலஹா ஆறேக்கர் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

இல-77, பிரதான வீதி, கலஹா.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2024 04:00)