திரு. சக்திவேல் கல்யாணசுந்தரம்

சக்திவேல் கல்யாணசுந்தரம்

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1941 - மறைவு: 30 மார்ச் 2026

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சக்திவேல் கல்யாணசுந்தரம் அவர்கள் 30-03-2026 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கல்யாணசுந்தரம் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆனந்தவேல் - இராசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினகுமாரி ( பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா (கனடா), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் (கனடா), சதீஷ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீனா, பானுஜா, வைஷ்ணவி, வைஷாலி, நீதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செந்திவேல், பழனிவேல், கமலாதேவி மற்றும் ராதாதேவி (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஊரிக்காட்டில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2026 00:00)