திரு. சம்பந்தர் சிவஞானரட்ணம் (சிவஞானம்)

சம்பந்தர் சிவஞானரட்ணம் (சிவஞானம்)

தோற்றம்: 18 நவம்பர் 1953 - மறைவு: 30 டிசம்பர் 2024

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும் முடக்காடு கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சம்பந்தர் சிவஞானரட்ணம் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் - கமலநாயகி தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் - செல்லப்பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வச்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வரத்தினம், இராசமலர் ஆகியோரின் அன்புச்  சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சித்தம்பி, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தன், இளங்கீரன், ஜெகவிநோதன், சுதாசினி, தர்சினி ஆகியோரின் அன்பத் தந்தையும்,

தனேசு, யோகாம்பிகை, சிந்துஜா, ஜெயக்காந்தன், குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பவிசன், கவிஸ்னா, இலட்ஷனா, வினுஷி, அபினேஷ், தனுஷன், திலக்ஷன், கர்சிகா, தருண், கானுஜன், கயூரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் (முடக்காடு வீதி, நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சோனப்பூ இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)