Mrs. Sambasivam Parashakthi
Date of Birth: 10 September 1930 - Deceased: 12 September 2024
யாழ். புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் பராசக்தி அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை முருகேசு-மாரிமத்து தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மு.தளையசிங்கம் (B.A பட்டதாரி, ஆசிரியர், கவிஞர்), மு.பொன்னம்பலம் (கவிஞர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
யமுனாதேவி, மணிமேகலை, சிவானந்தன், அருணா, கண்ணன், நளினி, நித்திலன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
கனம்மா, உமாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இலங்கநாதன், வில்வரட்ணம், ஆனந்தபாலன் மற்றும் சந்திரா, சுகந்தா, இராஜசேகரன், நாகேஸ்வரி ஆகியேராின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
