திருமதி. சந்தானா இன்னேசம் செபஸ்ரியம்பிள்ளை (செல்வக்கண்மணி)
(இளைப்பாறிய ஆசிரியை)
தோற்றம்: 20 செப்டம்பர் 1930 - மறைவு: 24 ஏப்ரல் 2024
யாழ். மண்டைதீவை பிறப்பிடமாகவும், மாதகல் சந்தையடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானா இன்னேசம் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் புகழ் உடல் 27-04-2024 சனிக்கிழமை அன்று அவரது மாதகல் பத்திமா வீதியிலுள்ள இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புனித தோமையார் சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org