திரு. சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)

(முன்னாள் உதவி முகாமையாளர் - சுதந்திர வர்த்தக வலயம், கொழும்பு, உரிமையாளர்- ராஜ் லொட்ஜ், ராஜ் தொலைத்தொடர்பு நிலையம்)

சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் (வவா)

மறைவு: 12 ஏப்ரல் 2025

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல- 31, கதீற்றல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தியோ அந்தோனிப்பிள்ளை ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியோ அந்தோனிப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், இயக்கோ மடுத்தீன் - அக்கினேசம்மா தம்பதியினரின் மருமகனும்,

தேவாராஜேஸ்வரி (ஒலிவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அன்ரனீரா (கிரிஜா - ஓய்வு நிலை ஆசிரியை), அஞ்சலோ (ராஜூ - உதவிப் பொது முகாமையாளர், DEARO Investment Ltd), ஆன்ஸ்ரறீனா (வனஜா - ஆசிரியை, யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜஸ்ரின் அன்ரனிற்றோ (ஓய்வு நிலை பிரதி அதிபர்), ஜெராட் (றொசானி - ஆசிரியர், யாழ். புனித மரியாள் வித்தியாலயம் OLR), DR. ஜெறோம் லோகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்கா யோசப், ஸ்ரீபன், எட்வேட், அருட்சகோதரி மேரி லூயிஸ் (திருக்குடும்ப கன்னியர் சபை) மற்றும் ஜெறோம் (பிரான்ஸ்), ஜேம்ஸ் (கனடா), இருதயநாயகி பிற்றர் (ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் - கமநல அபிவிருத்தித் திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான ஜோன் பப்ரிஸ், கிறிஸ்ரீனம்மா அருட்சகோதரி. யூட் மடுத்தீன் (திருக்குடும்ப கன்னியர் சபை) மற்றும் இலாசறஸ் (ஓய்வு நிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜியஸ், அனோஜா, அனுராஜ், ஆன்கிறிஸ்ரர், ஆன் விக்ரோறினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருட்தந்தை விக்கர் பிலேந்திரன் (வாழ்நாள் பேராசிரியர் -  யாழ் பல்கலைக்கழகம்), அருட்தந்தை. வென்சஸ்சலோஸ் (OMI, அஞ்சலியகம், பருத்தித்துறை) ஆகியோரின் சிறிய தந்தையும்,

அருட்தந்தை அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை - புனித பீற்றர் தேவாலயம், நவாலி), அருட்சகோதரி. பிறிசில்டா (திருச்சிலுவைக் கன்னியர் சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருட்தந்தை ஜோன் கனிசியஸ் (பங்குத்தந்தை - புனித பற்றிமா தேவாலயம், உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் சரீரம் கதீற்றல் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-04-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் திருப்பலியின் பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2025 04:00)