திரு. சங்கரபிள்ளை கனகசிங்கம் (அப்பூசியர்)
மறைவு: 21 அக்டோபர் 2021
யாழ். கொல்லன்கலட்டி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோயிலடி, சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கனகசிங்கம் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
பார்வதி(பொன்னு) அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோஜா, சத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசமுருகன், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராஜலட்சுமி, தனபாலசிங்கம், பாக்கியலட்சுமி, பரிமளலட்சுமி, குருகுலசிங்கம், தனலட்சுமி, பரிபூரணலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகநாயகம், துரைச்சாமி, அப்புத்துரை, இராசதுரை, புவனேஸ்வரி, கணேசலிங்கம் மற்றும் விமலாதேவி, கைலாயநாதன், காலஞ்சென்ற சோதிப்பிள்ளை மற்றும் தர்மலிங்கம், சத்தியபாமா, சரஸ்வதி, கெங்காதேவி ஆகியோரின் மைத்துனரும்,
மாஜோன், தரணீஸ், தரணிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர்
www.tamilthakaval.org
