திரு. சங்கரப்பிள்ளை யோகராஜா
(இளைப்பாறிய சட்டத்தரணி, பிரசித்த நொத்தாரிசு மற்றும் முன்னாள் சிரேஸ்ட தொழில் அதிகாரி- இலங்கை தொழில் திணைக்களம்)
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1925 - மறைவு: 12 அக்டோபர் 2021
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்னம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற Dr. பேர்ள் அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தா (பொறியியலாளர்-பேர்த்), அஜித்குமார் (பொறியியலாளர்-சிட்னி), மதுரா (NSW Ambulance Services) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற லலிதா, சாந்தி, லலிதாம்பிகை, மகாதேவ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபரிகா, சபரேஸ், அரவிந்தன், அனீற்றா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தையா, ஞானசவுந்தரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
