Mr. Santhalingam Kanagaratnam
(உரிமையாளர் - யாழ் கூல்பார்)
Deceased: 07 December 2024
யாழ். ஓடைலேனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது 166, நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாந்தலிங்கம் கனகரெட்ணம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் - திருமலர்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் - யோகதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தேவிகாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாசுகி, சுமங்கலி, ஸ்ரீராம், சந்திரிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முரளிதரன், கருணாருந்தன், ஆதனா, ருஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகா, நிவேதா, விதுஷா, நிதுஷன், அப்ஷான், அல்தாப், சஸ்னா, தனிஷ், தசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
166,நாவலர் வீதி, ஐந்து சந்தி, யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
