திரு. சந்தியாப்பிள்ளை அன்ரன் செல்வராசா
(நெல்லியடி மொடேர்ன் ஸ்டோர்ஸ் - உரிமையாளர்)
மறைவு: 14 டிசம்பர் 2024
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தியாப்பிள்ளை அன்ரன் செல்வராசா அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், சந்தியாப்பிள்ளை-மரியமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தநாயகம்-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மாக்றேட் மெலனி அவர்களின் அன்புக் கணவரும்,
அலோஜிஸ் பவன்ராஜின் பாசமிகு தந்தையும்,
ஷெர்லி பிரதீபாவின் அன்பு மாமனாரும்,
அமிக்க தனுஷாவின் பாசமிகு பேரனும்,
அக்னேஸ் மங்களம், காலஞ்சென்றவர்களான பிலோமினா, அருட்சகோதரி ஜேசப்பின் மற்றும் மேரிஎம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோய், பேட்டி, டிலானி, ஜோயல் டானி, பால்ராஜ், டானியேல், சோபினி, ஜேம்ஸ், எசந்தியா, ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 16-12-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:30 மணியளவில் கரவை பரலோகமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, புகழுடல் கரவை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
www.tamilthakaval.org
