திரு. சந்தியோ மதியாபரணம்
தோற்றம்: 12 அக்டோபர் 1950 - மறைவு: 18 ஜூன் 2021
யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், குருநகரை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்தியோ மதியாபரணம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் சந்தியோ அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து பிரான்சிஸ் செசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற மதியாபரணம் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன்ஜெனிதா (கனடா), அலன் (ஜேர்மனி), யூட் (பிரான்ஸ்), ராஜு (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தர்ஸன், ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அலோசியஸ் (மரியநாயகம்), ராணி, மரியராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மொனிக்கம்மா (அரியமணி), மயில்வாகனம், தாசன், அடைக்கலமேரி, ஸ்ரனிஸ்லாஸ், மரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான றொபேட், சூசைப்பிள்ளை (யோசை) மற்றும் அமுதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற பகவத்சிங், யூடிற் யோகினி, ஜெனிதா, வீஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜஃப்னி, பிரியதர்ஷினி, சந்தோஷ், கெவின், யொகான், பிலிப், டிஷோன், ஸ்ரெபான், எல்லோரா, மரியோ, எப்ஸிபா, அனொன்ரிங், ஜெசூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
