திருமதி. சரசுவதி குமாரசிங்கம்
தோற்றம்: 22 ஜூன் 1949 - மறைவு: 08 ஏப்ரல் 2021
யாழ். அல்வாய் மேற்கு மாவோடை திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரசுவதி குமாரசிங்கம் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று திக்கம் மாவோடையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கெங்காத்தை(திக்கம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் சிவக்கொழுந்து(அச்சுவேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகி (திக்கம்), ரமேஸ் (ஜேர்மனி),சுரேஸ் (திக்கம்), தினேஸ் (திக்கம்), உமேஸ் (திக்கம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி (வவுனியா), காலஞ்சென்ற இராசமணி, பஞ்சலிங்கம் (திக்கம்), தங்கமணி (ஜேர்மனி), சுந்தரலிங்கம் (ஜேர்மனி), கணேசலிங்கம் (அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மயூரன் (திக்கம்), கசிந்தா (தெல்லிப்பழை) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிகாரிகா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
