திருமதி. சரஸ்வதி சோமசுந்தரம் (விசுவப்பா)
தோற்றம்: 25 ஜனவரி 1950 - மறைவு: 23 ஆகஸ்ட் 2025
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரஸ்வதி சோமசுந்தரம் (விசுவப்பா) அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயாத்துரை - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகளும்,
பசுபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் (விசுவப்பா) அவர்களின் துணைவியும்,
அகிலதரன் உயதரன், காலஞ்சென்ற தீபதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகன்யா ,ஜோதிரூபினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்திராலட்சுமி சரோஜாதேவி, யமுனராஜா, யோகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பேரம்பலம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், லிங்கேஸ்வரி, சசிகலா, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், தவமணிதேவி ருக்மணிதேவி மற்றும் பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
சினேகா, கிசானா, தரணிஷ், தேணுகா, கரணிகா, பிரமிகா அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 05:00 - 09:00 மணி வரையும், 27-08-2025 புதன்கிழமை அன்று காலை 08:00 - 09:30 மணி வரையும் Ajex Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
