திரு. சரவணமுத்து பாலசுப்பிரமணியம் (பாலாமணி)

சரவணமுத்து பாலசுப்பிரமணியம் (பாலாமணி)

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1945 - மறைவு: 13 ஜூலை 2025

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 79வது அகவையில் சுவிஸில் இறைவனடி சேர்ந்தார். 

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - சிவக்கொழுந்து தம்பதியினரின் அருமைப் புதல்வரும், பாக்கியநாதர் - அந்தோணியார்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருகரும்,

அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆனந்த கிருஷ்ணன், வனஜா, தனுஷா, அனுஷாகுமாரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சண்முகநாதன் (சந்திரன்), பரமலிங்கம் (பப்பு), தனபாலசிங்கம் (சின்ராசா - கனடா), சத்தியலெட்சுமி (பூமா), விஜயலெட்சுமி (விஜயா), பாக்கியலெட்சுமி (பேபி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சிந்துஜாவின் மாமனாரும்,

மிசெல் ஏஞ்சலினா, அஜய் அரியேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 - 06:00 மணி வரையும், 16-07-2025 புதன்கிழமை 10:30 - 03:00 மணி வரையும் Friedhof Herzogenbuchsee Sternenmattstrasse (Sternenmattstrasse 20, 3360 Herzogenbuchsee) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-07-2025 வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம 1:00 மணியளவில் திருவுடல் Krematorium Geissbergweg (Geissbergweg 29, 4900 Langenthal) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)