Mrs. Saroja Sellamutthuppillai
Date of Birth: 09 January 1952 - Deceased: 24 December 2025
இந்தியா - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கிரமாத்தை சேர்ந்த திருமதி. சரோஜா செல்லமுத்துபிள்ளை அவர்கள் 24-12-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனியப்பட்டி கந்தசாமிப்பிள்ளை - செல்லம்மாள் (ரம்பொடை) தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை - தைலம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
செல்துத்துபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அனுராதா, வர்ணபிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியமூர்த்தி (ஹட்டன்), நிலுஷா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம் (ரம்பொடை), முத்துசாமிப்பிள்ளை (கிருலப்பனை), புஷ்பம் (நீர்கொழும்பு) மற்றும் செல்லையா (Crown Hardware), ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன், புவனேஷ்வரி (இந்தியா), ஜெயலக்ஷ்மி (இந்தியா) ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. சோமசுந்தரம்பிள்ளை, ருக்மணி, காலஞ்சென்ற சிவநேசன், இந்திராதேவி ஆகியோரின் சம்பந்தியும்,
ஸ்வேதா, ஜோகிந்திரா ஆகியோரின் அம்மாயியும்,
டிர்தியின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-12-2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
