Mrs. Sarojini Devi Arasalingham
(முன்னாள் ஆசிரியை - புனித பீட்டர்ஸ் கல்லூரி, பம்பலப்பிட்டி)
Deceased: 29 May 2026
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சரோஜினி தேவி அரசலிங்கம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையவர் கந்தையா- நாகமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முருகேசு கந்தையா - தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,
Dr. கந்தையா அரசலிங்கம் (கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. அஜினி (முன்னாள் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம் நரம்பியல் நிபுணர்) அவர்களின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலைநாதன், அமிர்தராணி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
