திருமதி. சரோஜினிதேவி நடராஜா
தோற்றம்: 30 மார்ச் 1937 - மறைவு: 16 நவம்பர் 2021
யாழ் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும்,யாழ் தெல்லிப்பழை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்டவரும்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான திரு. நடராஜா காண்டீபன் அவர்களின் தாயிருமாகிய திருமதி.நடராஜா சரோஜினிதேவி அவர்கள் 16-11-2021ம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் மானிப்பாயில் இயற்கை எய்தினார்.
அன்னார், பங்களா ஒழுங்கை மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகராயர் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
பன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபை நடராஜர் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன் (மானிப்பாய்), சடகோபன் (கனடா), காண்டீபன் (கொழும்பு), தமயந்தி (பன்னாலை) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி- அப்பாசாமி, சொக்கநாதன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்ததி, சுவேதினி, வானதி, கணேசானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துளசிராம், சம்யுக்தன், மதுரா, டினுஷன், வர்ஷன், ஹேமாங்கி தமிழவள், பகலவன், இனியவள், வித்தகன், கனிமொழி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று பன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
