திருமதி. சரஸ்வதிதேவி துரைபாண்டி
தோற்றம்: 10 ஏப்ரல் 1941 - மறைவு: 18 மே 2024
நுவரெலியா, கொட்டகலை ஸ்டேசன் வீதி, இல-56/ஊ மகேஷ் இல்லத்தை வசிப்படமாகக் கொண்ட திருமதி. சரஸ்வதிதேவி துரைபாண்டி அவர்கள் 18-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைபாண்டி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகேஷ்வரன், யோகேஸ்வரி, சாந்தகுமார், கோபிநாத், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ரவீந்திரனின் அன்பு மாமியாரும்,
நதீவ், லக்ஷயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொட்டகலை பொது மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
