ஶ்ரீமதி. சதா சிவசுப்பிரமணியக் குருக்கள் புஸ்பவதி அம்மா
மறைவு: 09 ஆகஸ்ட் 2024
யாழ். புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கு, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சதா சிவசுப்பிரமணியக் குருக்கள் புஸ்பவதி அம்மா அவர்கள் 09-08-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதா சிவசுப்பிரமணியக் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரக் குருக்கள், சிவகாமசுந்தரி, ரஞ்சினி, சுரேஸ்வரக்குருக்கள் ரமேஸ் சர்மா, காலஞ்சென்ற சதாசிவ சர்மா, தினேஸ் சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதநந்தினி, சத்தியானந்தகுருக்கள், சிவராம சர்மா, பாமதி, ரஜனிபாலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று அருமைப்புதல்வர் சிவகுமாரகுருக்கள் (சிவாஐயாவின்) இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10. 00 மணியளவில் புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
47/15, தலைமகள் வீதி, 2ம் ஒழுங்கை
நல்லூர் வடக்கு, கல்வியங்காடு.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
