சிவஶ்ரீ. சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள்
(பருத்தித்துறை புலோலி பசுபதீஸ்வரர் தேவஸ்தான முன்னாள் பிரதம குரு)
தோற்றம்: 26 அக்டோபர் 1935 - மறைவு: 13 செப்டம்பர் 2025
யாழ்.காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி கும்பழாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ. சதாசிவ ஐயர் ஜோதீஸ்காமக்குருக்கள் நேற்று 13-09-2025 சனிக்கிழமை அதிகாலை சிவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவ ஐயர் நாகம்மா தம்பதியினரின் முத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சீதாலக்ஷமி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இரத்தினசபாதிக்குருக்கள், காலஞ்சென்றவர்களான் பாலகுமாரசுவாமிச்மா, திருச்செந்தில்நாதர்மா, மனோன்மணி அம்மா, கருணாகரசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பத்மநாதக் குருக்கள் (கண்டி), கோகில ராணி, சாந்தினி தேவி, ஸ்ரீசிவநாதசர்மா, சர்வேஸ்வரநாத குருக்கள், வத்சலா தேவி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ரங்கநாயகி, ரகுநாதசர்மா, வேணுகோபாலசர்மா, அனுசூயா, சாந்தினி, குமாதாஸக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசாந்தி, உமாசுதக்குருக்கள், ரங்கநாதக்குருக்கள், கேசனா, ராகவசர்மா, கஸ்தூரி, கஜபரக்குருக்கள், கஜானி, தேனுகா, அம்சவர்த்தனா, விஸ்வசுந்தர் சர்மா, அபராஜித சர்மா, தர்சனா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஸ்ரீராம், வர்ஷினி, ஆத்மீகா, தர்ணீஸ், கஜஸ்ரீ, பிரணீஸ் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள்கள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் அபரக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முற்பகல் 11.00 மணியளவில் அளவெட்டி மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
