திரு. சதாசிவம் ஞானலிங்கம்

சதாசிவம் ஞானலிங்கம்

தோற்றம்: 25 டிசம்பர் 1949 - மறைவு: 08 நவம்பர் 2025

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது திக்கிராய் வீதி, வட்டு தென்மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் ஞானலிங்கம் அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி (ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ் (அரச நில அளவையாளர் - பிரதேச நில அளவைக் காரியாலயம், பூநகரி) அவர்களின் அன்புத் தந்தையாரும்,

சிவலிங்கம், காலஞ்சென்ற நவமணி, ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்துஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், நல்லூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணவி, லக்ஸவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2025 23:00)