திரு. சதாசிவம் மகாலிங்கம்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

சதாசிவம் மகாலிங்கம்

தோற்றம்: 28 மார்ச் 1930 - மறைவு: 09 மே 2024

யாழ். சரவணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கு, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் மகாலிங்கம் அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பரெத்தினம் அவர்களின் அன்புக்கணவரும்,

குலதீபன் (கனடா), காலஞ்சென்ற சிவபாலன், சிவமலர் (ஆசிரியை - St. Thomas Prep. Scholl, Colombo-03) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவக்கொழுந்தின் பாசமிகு அண்ணனும்,

மன்மதகாந்தன் (உப அதிபர் - கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி), ஞானேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதியுதன், கபிலன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான தனநாயகம், இராஜேஸ்வரி மற்றும் கனகரட்ணம் (கனடா), சற்குணசிவம் (கனடா), உமா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரமணி, வனிதா (சுவிஸ்), கிருபாகரன் (அமெரிக்கா), தயாபரன் (கனடா), Dr. ராஜ் (அமெரிக்கா), சாரங்கன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கருணாரூபினி (கனடா), சியாமளா (கனடா), சிவகுமார் (கனடா), மனோகரி (கனடா) ஆகியோரின் பாசமிகு ஆசையப்பாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் கல்கசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/05/2024 04:00)