திரு. சதாசிவம் நாகராஜா

(இளைப்பாறிய மாவட்ட நீதிபதி)

சதாசிவம் நாகராஜா

தோற்றம்: 27 மே 1935 - மறைவு: 03 மே 2025

யாழ். அல்வாய் வடக்கு கொத்தலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளை மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் நாகராஜா அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், 

நவமணியின் அன்புச் சகோதரனும்,

தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஞ்சலி, சிவரூபினி, விஜயராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிதரன், மயூரன் ஆகியோரின் மாமனாரும்,

மயூரி, ஹர்சினி, கைலன், வைஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2025 04:00)