திருமதி. சதாசிவம் பரமேஸ்வரி
தோற்றம்: 21 நவம்பர் 1952 - மறைவு: 18 ஜனவரி 2025
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சதாசிவம் பரமேஸ்வரி அவர்கள் 18-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன், ரமணன், வாகீசன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
நிசாந்தினி, ஜீவதர்சினி, பவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரிசான், ஆதனா, அருண், அருணிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
