திரு. சதாசிவம் சிற்சபைஈசன்
தோற்றம்: 02 செப்டம்பர் 1944 - மறைவு: 02 மார்ச் 2026
யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், Mississauga - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிற்சபைஈசன் சதாசிவம் அவர்கள் 02-03-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இ-றைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி (தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்யமீரா, நித்யநீரா, நாளினி, ராதிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
இரவீந்திரநாதன், துஷ்யந்த், அந்தோனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைகுந்தன் - கேர்ஸ்ரன், கௌதமன், துளசி, கயலி, அமலி, வளன், நீக்கோலா, டாறியோ, மாயா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம், கனகசபேசன், தர்மசபேசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்வத்துரை சட்டநாதர் அவர்களின் உணர்நிலை சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரையும், 09-03-2026 திங்கட்கிழமை நண்பகல் 12.00 - 1.00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (73 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
