Mr. Sathasivam Thampithurai
(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் - மக்கள் வங்கி, அகில இலங்கை சமாதான நீதவான்)
Date of Birth: 14 March 1934 - Deceased: 11 December 2025
யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தம்பித்துரை அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,
தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லையா, அன்னம்மா, இராசதுரை, சின்னராசா, பவளராணி மற்றும் பூமணி (உடுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிறேமாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் - வலிகாம வலயம்), தபோநிதி (ஜேர்மனி), கிருபாநிதி (உடுவில்), பிரபாகரன் (பொறியியலாளர் - இலண்டன்), கிருபாகரன் (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் - உள்ளூராட்சி திணைக்களம், கிளிநொச்சி), யசோதரன் (ஆசிரியர் - யாழ். வண்.வைத்தீஸ்வரா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அம்பிகைபாலன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சிவபாலன்(ஜேர்மனி), கங்காதரன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்), விஜிதா (இலண்டன்), றஜிதா (முகாமைத்துவ உதவியாளர் - நீதவான் நீதிமன்றம், யாழ்ப்பாணம்), நிராஜினி (முகாமைத்துவ உதவியாளர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசீமிகு மாமனாரும்.
துஷ்யந்தி (ஆயுர்வேத மருத்துவர் - உடுவில்), பிறேமபாலன் (வங்கி உத்தியோகத்தர்-இலங்கை வங்கி), லக்ஸ்மன் (ஜேர்மனி), வினுசனா (ஜேர்மனி), தேனுஜா (ஆசிரியை - அஸாஹிரா கல்லூரி), இளங்குமரன் (HNDE மாணவன்), பானுஜா (மருத்துவ பீட மாணவி, யாழ்.பல்கலைக்கழகம்), தீபிகா (பொறியியலாளர் இலண்டன்), கீர்த்திகா (இலண்டன்), யதுஷன், விகாஷ், ஷனஜன், டனோஷன் (யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்), ஜெனார்த்தனன் (விரிவுரையாளர் - பொறியியல் பீடம், யாழ்.பல்கலைக்கழகம்), மகிஷாளினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாய திணைக்களம், திருநெல்வேலி), அக்ஷிகா (ஜேர்மனி), ஜெனிபன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸ்ரீ ஹர்சினி, ஸ்ரீஹர்சிதா (கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள்), டன்வந், ஆரியன், அஜெய் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
பிள்ளையார் கோவிலடி,
உடுவில் தெற்கு, மானிப்பாய்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
