திரு. சதீஸ்வரன் சந்திரசேகரம்
(பிரபல வர்த்தகர்)
தோற்றம்: 19 ஜூலை 1977 - மறைவு: 19 ஜூலை 2024
யாழ். வேலணை மேற்கு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதீஸ்வரன் சந்திரசேகரம் அவர்கள் 19-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற சந்திரசேகரம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
லோகிணி அவர்களின் அன்பு கணவரும்,
ஷாருகேஸ், ஆதேஸ், ஶ்ரீஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமதி (கனடா), வளர்மதி (கனடா), ஜெகதீசன் (இலண்டன்), சுமதி (கனடா), கேதீஸ்வரன் (இலண்டன்), சுபாஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபாஸ்கரன், ஆனந்தராஜா (கனடா), சுபாஜினி (இலண்டன்), சதானந்தன் (கனடா), பவித்ரா (இலண்டன்), சதீஸ்குமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மதுஷா, சஞ்சீவ், ரிஷாந், பவிஷாந், லக்ஷாந், மிதுஷன், கிருஷாணி, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சௌமியா, ஹரிஷன், ஷாருஜன், சஞ்சனா, கேசவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
