யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து விக்டர் இம்மானுவேல் அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஊர்காவற்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற பிலிப்புபிள்ளை சவரிமுத்து, மேரி லூர்ட்ஸ் அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
மற்றில்டா சரோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சமந்தா யார்லின், அன்ட்ரியா மயூரி, கேய்ட்லின் சுகன்யா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோசப் சரனிஸ்லஸ், சார்ல்ஸ் அமிர்தநாயகம், யூலியற் பஸ்ரியான்பிள்ளை, மேரி திரேசா கொன்ஸ்ரன்ஸ், பீட்டர் ஜெரார்ட், யாழ்நகரைச் சேர்ந்த மாரி ஸ்டெலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலா சரனிஸ்லஸ் (ஐக்கிய அமெரிக்கா), ஞானேஸ் ரோசலின் அமிர்தநாயகம் (கனடா), காலஞ்சென்ற ருத்ரா பஸ்ரியான்பிள்ளை, டொரத்தி ஜீன் ஜெரார்ட் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான ரீட்டா தியோபிலஸ், அந்தோனிபிள்ளை கிறிஸ்டோபர் ரட்ணராஜ், அந்தோனிபிள்ளை அல்பேர்ட் பற்றிக் செல்வராஜா, மேரி ரெபேக்கா ஜெயமணி விஜயநாதன் மற்றும் அந்தோனிபிள்ளை எட்வேர்ட் யோசப் ஆனந்தராஜா (கனடா), மேரி திரேசா மனோராணி ரட்ணசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

