திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம்

சாவித்திரிதேவி கணேசலிங்கம்

மறைவு: 01 செப்டம்பர் 2024

யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிறாப்பர் கந்தையா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம் (இளைப்பாறிய உப அதிபர்-யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரப்பிரியா, கிரீஷன் (ஆசிரியர்-சென் ஜோன்ஸ் கல்லூரி), Dr. கீர்வாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கஜானனன், கோசலை, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாமநயனா, ஹரி, ஈர்த்தன் கிருத்விகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2024 திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2024 04:00)