திருமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)
(ஓய்வுபெற்ற ஆசிரியை- அளவெட்டி அருணோதயா கல்லூரி)
தோற்றம்: 07 ஆகஸ்ட் 1934 - மறைவு: 31 மே 2022
பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஜேர்மனி Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா (மொடர்ன் தியேட்டர்- பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,
சிற்சபேசன் (கனடா), சிவயோகன் (சுவிஸ்), விக்னேஸ்வரன் (இங்கிலாந்து), காயித்திரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சச்சிதானந்தன் (கனடா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திருச்செல்வம், ராமநாதன், திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாத்ரி (மலேசியா), கிருஷ்ணவேணி (சுவிஸ்), நந்தினி (இங்கிலாந்து), ஜெகதீஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா(கனடா), அஞ்சலி(சுவிஸ்), தீபன்(சுவிஸ்), சுவாதி(சுவிஸ்), விதுஷன்(ஜேர்மனி), கிஷோபன்(ஜேர்மனி), ஐஸ்வரியா(இங்கிலாந்து), திஷபன்(ஜேர்மனி), ஹரிஹரன்(இங்கிலாந்து), சாதனா(மலேசியா), ஓம்சாய்(மலேசியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தீரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
