Srimathi. Seethaletchumi Seetharamakirushnasharma
Date of Birth: 13 October 1955 - Deceased: 02 September 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயினைப் வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. சீதாலெட்சுமி சீதாராமகிருஷ்ணசர்மா அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமிஐயா - சாவித்திரிஅம்மா (யோகம்மா) தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஞானசேகரஐயர் - சுந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சீதாராமகிருஷ்ண்சர்மா அவர்களின் அன்பு மனைவியும்,
சுபஹரி, ஸ்ரீசாரங்ககுருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரசர்மா, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஷ்வாதிகாசீதா, அம்ரித்ஷ்கந்தன், சாயிஸ்வரசர்மா, திஷாதரசர்மா, சுகஸ்திகசர்மா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
